நேரத் துளிகள் நின்று திரும்பி பார்த்தன
இறந்த மனிதன் எழுந்து நிற்க,
பரந்த வான் வந்தனம் செய்தது
தன்னை படைத்தவரை
மூன்று நாட்கள் மூச்சிழந்த பிரேதம்,
முழங்கால்களை முடக்கி நிற்க செய்தது.
பாதாளம் அடக்க இயலா அடைக்கல கடவுள்,
என் வேந்தன் வெற்றி பெற்றார்.....இறுதியில்
அவ்வல்லமை இன்றும் செயல் பட்டு
அழிந்த அனைவரையும் புதிதாக்குகிறது
கூபிட்டவரை கரம் நீட்டி தாங்குகிறது.
உயிர்தெழுந்த இயேசுவின் கதை இது...
No comments:
Post a Comment